இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், பழங்குளம் ஐஸ்வர்யா நகர் பேருந்து நிறுத்தம்,பயணிகள் நிழற்குடை மற்றும் சாலை வசதிகள் செய்துதர பொதுமக்கள் கோரிக்கை
இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பேராவூர் பஞ்சாயத்து, பழங்குளம் மற்றும் ஐஸ்வர்யா நகர் பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இவர்கள் பள்ளி மற்றும் அலுவலகங்கள் செல்வதற்கு பேராவூர் ஊராட்சி . பழங்குளம் ஐஸ்வர்யா நகர் பேருந்து நிறுத்ததை பயன்படுத்தி வருகின்றனர் தற்போது மழை பெய்து வரும் சூழலில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் மழையில் நனைந்தும் வெயில் காலங்களில் வெயிலிலும் நிற்க வேண்டியுள்ளது.
பேருந்துக்காக காத்திருக்கும் முதியோர், மற்றும் மாற்று திறனாளிகள் அமர்ந்திருக்க இருக்கை வசதிகள் இல்லாமலும் பழுதடைந்த நிழற்க்குடை என்னேறமும் கீழே விழும் நிலையில் உள்ளது.
பயணிகள் பாதுகாப்பாக நிற்பதற்கு புதிய நிழற்குடையும். ஐஸ்வர்யா நகர் சாலை குண்டும் மகுழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளதை சீரமைத்து தரகோரியும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
No comments:
Post a Comment