இராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு மூலம் உலக எய்ட்ஸ் தின விழா நிகழ்ச்சி விழிப்புணர்வு குறித்து கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர், அவர்கள் துவக்கி வைத்தார்
இராமநாதபுரம் முகமது சதக் தஸ்தஹிர் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் இன்று 02.12.2024 மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு விழா நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சிம்ரன்ஜீத் சிங் கலோன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையேற்று விழிப்புணர்வு குறித்த ரங்கோலினை (கோலத்தை) பார்வையிட்டு விழிப்புணர்வுக்கான கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார் அதனைத் தொடர்ந்து அலுவலர்கள் பணியாளர்கள் முன்னிலையில் உலக எய்ட்ஸ் தினம் 2024 க்கானா விழிப்புணர்வு உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது அதனைத் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் பணியாளர்கள் தன்னர்வ அமைப்புகளுக்கு பாராட்டி சான்றிதழை வழங்கி அனைவரும் உடனான சமபந்தி விருந்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சிம்ரன்ஜீத் சிங் கலோன்,இ.ஆ.ப.,அவர்கள் கலந்துகொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொது சுகாதார அலுவலர் திரு.மரு.அர்ஜுன் குமார் அவர்கள் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு திட்ட மேலாளர் திரு முருகேசன் அவர்கள் மாவட்ட எட்ஸ் கூட்டமைப்பு விரிவாக்க கல்வியாளர் திருமதி முனீஸ்வரி அவர்கள் மற்றும் அலுவலர்கள் தொண்டு நிறுவன அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment