தொண்டி பெண்ணின் வயிற்றில் இருந்த 5 கிலோ கட்டியை அகற்றி தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை ,
இராமநாதபுரம், டிச,2: இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா மங்களக்குடியை அடுத்த சம்பாநெட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் மனைவி அருளம்மாள் (53). இவருக்கு நீண்ட நாட்களாக தீராத வயிற்றுவலி இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வயிற்று வலி அதிகமாகவே, அவர் சிகிச்சைக்காக தொண்டி AVK தனியார் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். அங்கு அவரை டாக்டர் பரிசோதித்ததில் அருளம்மாள் கர்ப்பப்பையில் கட்டி இருந்ததைக் கண்டுபிடித்தனர். இதனையடுத்து நேற்று விபத்து மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சேகர் வேளாணி தலைமையில் அறுவை சிகிச்சை டாக்டர் சதீஷ், மயக்கவியல் டாக்டர் ரஜினி மற்றும் செவிலியர்கள் உள்ளிட்டோர் அருளம்மாளுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட பொழுது அருளம்மாளில் வயிற்றில் கர்ப்பப்பையில் இருந்த 5 கிலோ எடையுள்ள நீர் கட்டியினை அகற்றினர். அதன் பிறகு அவர் சிகிச்சை பெற்று வருகிறார் இது குறித்து தெரிவித்த டாக்டர் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள நோயாளி நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் கூறினார். தொண்டி பகுதியில் இதுவரை இது போன்ற அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு மருத்துவ வசதி இல்லாமல் இருந்த நிலையில் தற்பொழுது இந்த மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மற்றும் அவசரகால சிறப்பு சிகிச்சை கிடைத்திருப்பது இப்பகுதி மக்களுக்கு வரபிரசாதமாக அமைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment