இராமநாதபுரம் மாவட்டம். முன்னாள் அமைச்சரின் ஆறரை ஏக்கர் நிலம் போலி ஆவணங்கள் மூலம் பட்டா மாறுதல் செய்து கொடுத்த கிராம அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார், - தமிழககுரல் - இராமநாதபுரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, December 1, 2024

இராமநாதபுரம் மாவட்டம். முன்னாள் அமைச்சரின் ஆறரை ஏக்கர் நிலம் போலி ஆவணங்கள் மூலம் பட்டா மாறுதல் செய்து கொடுத்த கிராம அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்,

 


இராமநாதபுரம் மாவட்டம். முன்னாள் அமைச்சரின் ஆறரை ஏக்கர் நிலம் போலி ஆவணங்கள்  மூலம்   பட்டா மாறுதல் செய்து கொடுத்த கிராம அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்,


அதிமுக  முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன் அவர்களின் பெயரில் உள்ள 6,5 ஏக்கர்  நிலத்தை  போலி ஆவணம் மூலம் வேறு நபருக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டதால் அ.மணக்குடி குரூப் கிராம அலுவலர் மணிகண்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.


 இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம்  அ.மணக்குடியை சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் வ.து. நடராஜன் அவர்கள் இவரது  6.5 ஏக்கர் நிலம் அ.மணக்குடியில்  உள்ளது இந்த நிலத்தை தொண்டியை சேர்ந்த மன்சூரா பீவி என்பவர்  பெயருக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டது  இது குறித்து நடராஜன் அளித்த  புகாரின் பேரில்  இராமநாதபுரம் ஆர்.டி.ஓ  திரு.ராஜமனோகரன் அவர்கள் விசாரணை செய்தார்.  இதில் போலி ஆவணங்கள் மூலம் தயார் செய்து நிலம் பட்டா  மாற்றப்பட்டது தெரிய வந்தது.அதன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் மேலும் 



இது பற்றி, ஆர்.டி.ஒ, அவர்கள் கூறியதாவது, இந்த நில பிரச்சனையில் உண்மை கண்டறிந்து  அ.மணக்குடி குரூப் வி.ஏ.ஓ, மணிகண்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்ள்ளதாகவும்  மண்டல துணை தாசில்தார் பணியாற்றிய பாலமுருகன் (தற்போது வட்டல் வழங்கள் அலுவலர்) மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad