இராமநாதபுரம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே சட்ட விழிப்புணர்வு முகாம். - தமிழககுரல் - இராமநாதபுரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, December 1, 2024

இராமநாதபுரம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே சட்ட விழிப்புணர்வு முகாம்.


 இராமநாதபுரம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே சட்ட விழிப்புணர்வு முகாம்.



 ஆர்.எஸ். மங்கலம் அருகே உள்ள அத்தானூர் கிராமத்தில் உள்ள சமுதாய கூட அரங்கில் ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு  மற்றும் திருவாடானை வட்ட சட்டப் பணிகள் குழு  இணைந்து நடத்திய சட்ட விழிப்புணர்வு முகாம்   மாவட்ட உரிமையியல் நீதிபதியும் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவர் (பொ) மனீஸ்குமார்  தலைமையில் நடைபெற்றது. 



இம்முகாமில் ஆர்.எஸ்.மங்கலம்  வட்டாட்சியர் வரதராஜன், வட்டாட்சியர் (ச.பா.தி), யூனியன் சேர்மன் ராதிகா பிரபு, அரசு வழக்கறிஞர் கனேஷ் பிரபு வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) மலைராஜன் உள்ளிட்டோர்கள் முன்னிலை வகித்தனர். முன்னதாக வட்ட சட்டப் பணிகள் குழுவின் இளநிலை உதவியாளர் முத்து விஜயன் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து வழக்கறிஞர் மங்களேஷ்வரன் இலவச சட்ட உதவி மையத்தின் செயல்பாடுகள் குறித்து பேசினார். அரசு வழக்கறிஞர் (சிவில்) பொது மக்கள் சட்ட உதவி மையத்தை பொதுமக்கள் எவ்வாறு நாடி பயன் பெறுவது என்பது குறித்து விளக்கினார். அதே போல் வட்டார வளர்ச்சி அலுவலர் மலைராஜன் அரசு ஊரக வளர்ச்சி துறைமூலமாக என்ன ? என்ன திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்பதனை விளக்கி கூறினார். சமூக பாதுகாப்பு தாசில்தார் அவர்கள் சார்ந்த துறையில் என்ன என்ன ? திட்டங்கள் உள்ளது. அதனை பொது மக்கள் எவ்வாறு பெறுவது அதனை பெறுவதற்கான தகுதிகள் என்ன என்பது குறித்து எடுத்துரைத்தார். வட்டாட்சியர் வரதராஜன் பேசுகையில் பொதுமக்கள் அரசின் திட்டங்களையும், சான்றிதழ்கள், பட்டா மாறுதல் உள்ளிட்டவற்றை பெறுவதற்கு எந்த இடைதரகர்களையும் நாடாமல் இ சேவை மையத்தின் மூலம் விண்ணப்பித்து பயன் பெற வேண்டும் என கூறினார். நீதிபதி மனீஸ்குமார் பேசுகையில் பொதுமக்களின் நலனுக்காகவே மத்திய, மாநிலஅரசுகள் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது அதனை பொது மக்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பெண்கள், மாணவிகளுக்கும் பள்ளிகல்வி மற்றும் உயர் கல்வி பெறுவதற்கும், திருமணம், மகப் பேறு உட்பட பல நல திட்டங்கள் செயல்பட்டு வருகிறது அதனை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் மாவட்ட சட்டப் பணிகள் குழுவின் வழிகாட்டுதலின் பேரிலும் திருவாடானை நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் வட்ட சட்டப் பணிகள் குழு மூலமாக பொதுமக்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கு மனுக்களை பெற்று உரிய முறையில் தீர்வு காணப்பட்டு வருகிறது. பொதுமக்களாகிய தாங்கள் நீதிமன்றத்தை நாடி செல்வது வழக்கம். இதில் ஏழை ,எளிய மக்களும் பயன் பெற வேண்டும் என்பதால் மக்களை தேடி நீதிமன்றமே வரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது என்றால் கிராமப்புறத்தில் உள்ள அடிதட்டு மக்களும் பயன் பெற வேண்டும் என்பதற்காகவே.வட்ட சட்டப்பணிகள் குழுவில் சட்டம் சார்ந்த, சட்டம் சாராத தாங்களது  கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் மனுவாக எழுதி கொடுத்தால் சட்டத்திற்கு உட்டு அந்த மனுக்களை பரிசீலனை செய்யப்பட்டு அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் இந்த சேவையை பெறுவதற்கு பொது மக்கள் ஒரு ரூபாய் கூட செலவிட வேண்டியது இல்லை. ஆகையால் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளுக்கும் இலவச சட்ட உதவிகளை பெறலாம் இதனை அனைவரும் பயன்படுத்திக் கெண்டு பயன் பெற வேண்டும் என விளக்கி கூறினார்கள். இந்நிகழ்வில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர், கிராம நிர்வாக அலுவலர்,ஊராட்சி மன்ற தலைவர்கள் , உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர், வருவாய் துறையினர், பொதுமக்கள் கலந்து உட்பட சுமார் 150க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர் .இம் முகாமில் நீதிபதியிடம்  பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர் இறுதியாக சட்டதன்னார்வலர் கோட்டைச்சாமி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad