இராமநாதபுரம் டிச.11 திருஉத்திரகோசமங்கை ஸ்ரீமங்கள நாதசுவாமி திருக்கோயில் ஆருத்ர தரிசனம் ஒருநாள் மட்டும் உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சித்தலைவர், அறிவிப்பு
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் திரு உத்தரகோசமங்கை கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மங்கல நாத சுவாமி திருக்கோயில் ஆருத்ர தரிசன திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு வரும் 13.01.2025 அன்று திங்கள் கிழமை ஒருநாள் மட்டும் (பல்வகை)த்துறை உள்ளூர் விடுமுறை விடப்பட்டு அதனை ஈடு செய்யும் பொறுப்பு வரும் 25.01.2025 அன்று சனிக்கிழமை வேலை நாளாகவும் அறிவிக்கப்படுகிறது மேலும் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் 25.01.2025 அன்று வழக்கம் போல் இயங்கும் எனவும் இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலவாணி முறிச்சட்டம் 1881 -கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் 13.01.2025 திங்கட்கிழமை அன்று இராமநாதபுரம் மாவட்டம் மாவட்டத்திலுள்ள கருவூலம் சார்நிலைக் கருவூலங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு சிம்ரன் சீத் சிங் கலோன், இ.ஆ.ப., அவர்கள் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்கள்.
No comments:
Post a Comment