இராமநாதபுரம் மாவட்டத்திற்கு (19.11.2024) அன்று 16 -வது நிதிக்குழு தலைவர் முனைவர் ,அரவிந்த் பனகாரியா அவர்கள் மற்றும் உறுப்பினர்கள் திருமதி.அன்னி ஜார்ஜ் மேத்யு அவர்கள், முனைவர்.மனோஜ் பாண்டா அவர்கள், செயலாளர் திரு.ரித்விக் பாண்டே அவர்கள் ஆகியோர் வருகைபுரிந்து வளர்ச்சித் திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
இந்த ஆய்வின்போது 16 -வது நிதிக்குழு தலைவர் முனைவர்.அரவிந்த் பனகாரியா அவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இராமேசுவரம் வட்டம், தங்கச்சிமடம் ஊராட்சி,பேய்க்கரும்பு கிராமத்தில் பிரதம மந்திரி நவாஸ் யோஜனா கிராமிக் திட்டத்தில் கட்டப்பட்டுள்ள பயனாளிகள் வீட்டை பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் பயனாளிகளிடம் திட்டத்தின் பயன்கள் குறித்து கேட்டறிந்தார்கள் தொடர்ந்து 15 -வது நிதிக்குழு திட்டத்தில் மேற்க்கொள்ளப்பட்ட மற்றும் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்து பார்வையிட்டார்.
பின்னர் இராமநாதபுரம் நகராட்சியில் ரூபாய் 20 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் பேருந்து நிலையத்தை பார்வையிட்டதுடன் அதன் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து கேட்டாறிந்தனர். தொடர்ந்து இராமநாதபுரம் நகராட்சியில் அமுரூத் மற்றும் ஜல்ஜீவன் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் குறித்த திட்டப்பணிகளை ஆய்வு செய்து பார்வையிட்டானர்.
இந்த ஆய்வின்போது 16 -வது நிதிக்குழு சிறப்பு பணி அலுவலர் திரு.பிரஜேந்திர நவ்னிட்,இ.ஆ.ப., அவர்கள் அரசு (செலவு) நிதித்துறை செயலாளர் திரு.எஸ்.நாகராஜன்,இ.ஆ.ப., அவர்கள் ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் திருபா.பொன்னையா,இ.ஆ.ப., அவர்கள் நகராட்சி நிர்வாக இயக்குநர் திரு.எஸ்.சிவராஜ்,இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிம்ரன்ஜீத் சிங் கலோன்,இ.ஆ.ப., அவர்கள் கூடுதல் நிர்வாக இயக்குநர் திரு.சேக் அப்துல் ரஹ்மான்.இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.கோவிந்தராஜலு அவர்கள் கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.வீர் பிரதாப் சிங்,இ.ஆ.ப.. அவர்கள் உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.முகமது இர்பான்,இ.ஆ.ப., அவர்கள் இராமநாதபுரம் நகராட்சி ஆணையர் திருமதி.அஜிதா பர்வின் அவர்கள், இராமேசுவரம் நகராட்சி ஆணையர் திரு.கண்ணன் அவர்கள், இராமேசுவரம் நகராட்சி பொறியாளர் திரு.பாண்டீஸ்வரி அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment