இராமநாதபுரம் அரண்மனையில் நவராத்திரி தசரா திருவிழா" கோலாகலம்
இராமநாதபுரம் சமஸ்தானம் அரண்மனை ராஜ ராஜேஸ்வதி அம்மனுக்கு நவராத்திரி கொலு வைத்து பத்து நாட்கள் கலை நிகழ்ச்சிகள் உடன் கோலாகலமாக நடைபெற்றன,
இந்நாட்களில் அரண்மனையை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கபட்டு இருந்தன அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது நேற்றைய தினம் 12.10.2024 இரவு 10.00 மணியளவில்அரண்மனை வளாகத்தில் இருக்கும் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் அலங்கரிக்கபட்டு ஜமீன் முறைப்படி பூஜை செய்து அரண்மனையில் இருந்தும் பல அம்மன்கள் அலங்கரிக்கப்பட்ட சப்பர வாகனத்தில் கலை நிகழ்ச்சிகள் ஒட்டகம் குதிரைகள் அணி வகுத்து நாதஸ்வரம் மேளங்கள் முழங்க கடைவீதி, ஊர்வலம் ராஜவீதி, தினகரன் ராஜா அரண்மனை வழியாக கேணிக்கரை சென்று அங்கே உள்ள மகர்நோம்பு பொட்டல் மைதானத்தில் அம்பு விடும் நிகழ்ச்சி நடைபெற்றது
இதில் இராமநாதபுரம் சமஸ்தானம், ராணி திருமதி. ராஜேஸ்வரி நாச்சியார்,அவர்கள் இளைய மன்னர் நாகேந்திரசேதுபதி அவர்கள் உட்பட மன்னர் வாரிசுகள், மற்றும் அரசு அலுவலர்கள் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment