இராமநாதபுரம் அக்.21 பரமக்குடி வாகன விபத்தில் இருவர் உயிர் இழப்பு
பரமக்குடி நான்கு வழிச்சாலையில் TN 37DQ5432i20 கலர் காரை வினோதினி பிரியா 34 கணவர் ஸ்ரீராம் என்பவர் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார் இவர் கோவையில் தனது குடும்பத்தை பார்த்துவிட்டு இராமநாதபுரம் நோக்கி வாகைக்குளம் நான்குவழிச்சாலை பாலத்தில் வந்து கொண்டு இருக்கும்போதுWrong ரோட்டில் எதிர்புறம் வந்த TN63BR1926 என்ற Pulsur இருசக்கர வாகனத்தில் 20.10.2024 நேரம் இரவு 7.50 மணியளவில் இராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடி நோக்கி வந்தவர்கள் காரில் மோதியதில் சம்பவ இடத்திலே பலியானார்கள்.
உயிரிழந்தவர்கள் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சந்தை கடைதெரு நாகராஜன் மகன் லோகநாதன் வயது 25 என்பவரும் மற்றும் குமாரகுறிச்சி இராஜேந்திரன் மகன் சந்தோஷ் 24 என்பவர் ஆகிய இருவரின் உடல்களும் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பிரேத பரிசோதனை க்காக வைக்கப்பட்டுள்ளது.
விபத்து பற்றி பரமக்குடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment