இராமநாதபுரம் மாவட்டத்தில் 960 ரேசன் அரிசி மூட்டைகள் கடத்தல் - தமிழககுரல் - இராமநாதபுரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, September 2, 2024

இராமநாதபுரம் மாவட்டத்தில் 960 ரேசன் அரிசி மூட்டைகள் கடத்தல்


இராமநாதபுரம் மாவட்டத்தில் 960   ரேசன் அரிசி மூட்டைகள் கடத்தல் 


 கடந்த 28.08.2024-ம் தேதி இராமநாதபுரம் மாவட்ட ரேசன் கடைகளுக்கு விநியோகம் செய்ய வேண்டிய 50 டன் எடையுள்ள 960 அரிசி மூட்டைகளை  இரண்டு லாரிகளில் கடத்திச் சென்றது தொடர்பாக இராமநாதபுரம் நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த காவல்துறையினர், லாரி ஓட்டுநரை கைது செய்து, இரண்டு லாரிகள் மற்றும் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.


மிக விரைவாக செயல்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டிய அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டினார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad