இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதிகளில் தொடர்ந்து இனோவா காரில் வந்து ஆடுகளை திருடி சென்ற நபர்களை கைது செய்த இராமநாதபுரம் காவல்துறை, - தமிழககுரல் - இராமநாதபுரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, August 27, 2024

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதிகளில் தொடர்ந்து இனோவா காரில் வந்து ஆடுகளை திருடி சென்ற நபர்களை கைது செய்த இராமநாதபுரம் காவல்துறை,


 இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதிகளில் தொடர்ந்து இனோவா காரில் வந்து ஆடுகளை  திருடி சென்ற  நபர்களை  கைது செய்த இராமநாதபுரம் காவல்துறை,


CCTV கேமராக்கள்  ஆய்வு செய்ததின்   மூலம் ஆடு திருடிய நபர்களை இராமநாதபுரம் கேணிக்கரை  காவல்துறையினர்  கைது செய்தனர் 


இராமநாதபுரம்    மாவட்டம்,    இராமநாதபுரம்,    கீழக்கரை  பகுதிகளில்  தொடர்ந்து  கார்களில்  சென்று  ஆடுகளை  திருடி வரும்   நபர்களைக்  கண்டறிய  மாவட்ட  காவல் கண்காணிப்பாளர்  திரு.G.சந்தீஷ்,IPS.,  அவர்கள்  உத்தரவிட்டதின்பேரில்,  கேணிக்கரை  காவல் நிலைய    சார்பு  ஆய்வாளர்    திரு.தினேஷ்    தலைமையிலான    காவல்துறையினர்    தொடர் நடவடிக்கைகள்  மேற்கொண்டு  CCTV  கேமராக்களை  ஆய்வு  செய்ததில்  கிடைத்த  தகவலின் அடிப்படையி காரைக்குடியை சோ்ந்த ஆறுமுகம் மற்றும் அராபாத்  ஆகிய இருவரையும்  கைது  செய்து  அவர்களிடமிருந்து திருடப்பட்ட 8 வெள்ளாடுகள், ஆடுகள் விற்பனை செய்ததில் கிடைத்த ரூ. 1½  லட்சம் பணம் மற்றும் ஆடுகள் திருடுவதற்காக  அவர்கள்  பயன்படுத்திவந்த  TN01AC8499  Innova  வாகனம்  ஆகியவற்றை கைப்பற்றியும் .  மேலும்  தொடர்  ஆடு  திருட்டில்  ஈடுபட்ட  நபர்களை கைது  செய்த கேணிக்கரை சார்பு ஆய்வாளர் திரு.தினேஷ் தலைமையிலான  தனிப்படை காவல்துறையினரை இராமநாதபுரம்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad