ஆடி அமாவாசை நாளில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் இராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்பனம் (திதி)செய்து வழிபாடு செய்தனர்.
ஆடி அமாவாசை நாளில் ஆண்டுதோறும் முன்னோர்களுக்கு (திதி கொடுத்து தர்பணம்) செய்து வழிபடும் வழக்கம்
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ஆடி அமாவாசை நாளில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் செய்து வழிபட்டனர்.
பாம்பனில் அணி வகுத்து நின்ற வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்பமால் இருக்கும் வகையில் மாவட்ட காவல்துறை சிறப்பாக முன்னதாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தனர்
பாம்பன் கடல் பாலத்தின் சாலையில் இருபுறமும் போக்குவரத்து இடையூறுகள் ஏற்படா வண்ணம் நடுவே தடுப்பு கூம்பு அமைத்து போக்குவரத்து சீராக செல்லும் வகையில் முன் ஏற்பாடுகள் செய்தும் வாகனம் முந்தி செல்லாதும் கண்காணித்து வந்தனர்.
No comments:
Post a Comment