இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே டிரைவரின் கட்டுபாட்டை இழந்து கார் விபத்து - தமிழககுரல் - இராமநாதபுரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, June 27, 2024

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே டிரைவரின் கட்டுபாட்டை இழந்து கார் விபத்து


இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே  டிரைவரின் கட்டுபாட்டை இழந்து  கார் விபத்து


சாயல்குடி அருகே உள்ள  வாலிநோக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது மாலிக். இவர் குடும்பத்துடன் குற்றாலத்தில் இருந்து புறப்பட்டு சாயல்குடி அருகே உள்ள நரிபையூர் கிழக்கு கடற்கரை சாலைக்கு சென்றார்.அப்போது அவரது சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பனை மரத்தில் மோதியது.


இதில், காரில் பயணம் செய்த பரிதாபீவி (58), அப்ரின் பாத்திமா (3), சீனி பர்கான் (8 மாதம்) உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் பலத்த காயமடைந்த முகமது மாலிக், அவரது மனைவி அகமது நிஷா, மகள் அஸ்ரின் பாத்திமா ஆகியோர் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த விபத்து குறித்து சாயல்குடி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத்துடன் சுற்றுலா சென்று திரும்பிய 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் வாலிநோக்கம், கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad