கிழக்கு கடற்கரை சாலையை ஆக்கிரமித்துள்ள கருவேல முள் மரசெடிகளை அகற்ற கோரிக்கை
இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மீசல் அதிராமபட்டிணம் கோட்டைபட்டணம் நம்புதளை ஆகிய கிழக்கு கடற்கரைசாலையை முள்செடிகள் ஆக்கிரமிப்பு செய்து உள்ளது இதனால் இரவு நேரங்களில் வாகனம் ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்தபகுதில் கால்நடைகள் திடீரென சாலையை கடக்கும் போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது
பாண்டிச்சேரி முதல் கன்னியாகுமரி வரையில் ஆறு வழி சாலைகள் அமைய உள்ளதால் இந்த பகுதிகளில் சாலை பராமரிப்பு ஓரங்களில் இருபுறமும் முள்செடிகள் அகற்ற படாமல் உள்ளதாக சமூக ஆர்வலர் தொண்டி நாசர்கான் அவர்கள் தெரிவித்தார் சாலையின் இருபுறமும் கருவேல முள் செடிகளை அகற்றவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
செந்தில்குமார் இராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர்
No comments:
Post a Comment