ஊரணியில் கழிவு நீர் கலப்பதால் துர்நாற்றம் வீசுகிறது நோய்கள் பரவும் அபாயம்
இராமநாதபுரம் சக்கரக்கோட்டை ஊராட்சி பகுதியில் பாரதிநகர் சோத்தூரணி உள்ளது இந்த குளத்தில் கழிவு நீர் கலப்பதாலும் குப்பை தேங்கி இருப்பதாலும் துர்நாற்றம் வீசுகிறது
இராமநாதபுரம் இராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் பாரதிநகர் தென்புறத்தில் அமைந்துள்ளது சோத்தூரணி இந்த குளம் ஒரு காலகட்டத்தில் குடிநீர்க்காக பயன்படுத்திவந்தனர்
பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் இந்த பகுதியில் உள்ள தனியார் தொழில் நிறுவனங்கள் ஹோட்டல் மருத்துவமனை பேக்கரி போன்ற இடங்களில் இருந்து கழிவு நீர் கலந்து வருவதால் தற்போது துர்நாற்றம் வீசுகிறது
சக்கரக்கோட்டை ஊராட்சி பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கு வெட்டபட்ட கருவேல மரங்களை ஊராணிக்குள் போட்டு உள்ளனர் இந்த பகுதியில் தேங்கி உள்ள குப்பைகளால் மேலும் நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளதாக கருதுகின்றனர்
இப்பகுதி மக்கள் சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாக மற்றும் சுகாதார அலுவலர்கள் கவனத்தில் கொண்டு உடனடியாக கழிவு நீர் கலப்பதை தடுத்து நிறுத்தி ஊரணியை சுற்றியுள்ள கருவேல மரங்கள் குப்பையை அகற்றி மராமத்து செய்து முறையாக பராமரிக்க கோரிக்கை வைக்கின்றர்
இப்பகுதிகளில் வார சந்தை நடைபெறுகிறது கழிப்பிட வசதிகள் இல்லாமல் மிகவும் சிரம படுகின்றனர் தற்போது இந்த இடம் திறந்த வெளி கழிப்பிடமாகவும் இரவு நேர பார் ஆகவும் பயன்படுத்த படுகிறது
பொது மக்களின் கோரிக்கையை ஏற்று கழிப்பிட வசதிகள் செய்துதர வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.
No comments:
Post a Comment