இராமநாதபுரம் சக்கரக்கோட்டை பகுதியில் விற்பனைக்காக வைத்திருந்த போதை பொருள் வாகன சோதனையின் போது பிடிபட்டது.
இராமநாதபுரம் மாவட்டம் சக்கரகோட்டை பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கேணிக்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.தங்கஈஸ்வரன் தலைமையில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த ஹமீத் அகமது மற்றும் ஹபீப் முகமது ஆகியோரை விசாரணை செய்ததில் அவர்களிடம் 13 கிராம் மெத்தம்பெட்மைன் எனும் போதைப்பொருள் வைத்திருந்தது தெரிய வந்தது. மேலும் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 13 கிராம் மெத்தம்பெட்மைன் போதைப்பொருளும், போதைப்பொருட்கள் விற்பனைக்காகப் பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனம், 3 அலைப்பேசி மற்றும் ரூபாய் 20.000 ம் பணமும் பறிமுதல் செய்தனர்.
No comments:
Post a Comment