இராமநாதபுரம் மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் திட்டம்.
இராமநாதபுரத்தில் இன்று (09.09.2024) மகளிர் திட்டத்துறையின் மூலம் 598 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.47.33 கோடி சுழல் நிதிக்கான கடன் திட்ட ஆணைகள் வழங்கியும் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ரூ.7.24 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 44 கட்டடங்களையும் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் திரு.ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்கள் திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., அவர்கள், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.வீர் பிரதாப் சிங்,இ.ஆ.ப., அவர்கள், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.நவாஸ்கனி அவர்கள், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்கள், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு.செ.முருகேசன் அவர்கள், திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் திரு.இராம.கருமாணிக்கம் அவர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment